நடுரோட்டில் விழுந்த அம்மா - பதறிய மகன்.. செயின் அபேஸ் - பதை பதைக்கும் காட்சி

x

திருப்பூரில் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த பத்தரை சவரன் தங்க சங்கிலிகளை மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 31ம் தேதி கந்தசாமி என்பவர் தனது மனைவி யுவராணி மற்றும் மகனுடன் திருப்பூர்- அவிநாசி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே பைக்கில் வந்த 2 திருடர்கள், யுவராணியின் கழுத்தில் அணிந்திருந்த பத்தரை சவரன் மதிப்புள்ள 2 செயின்களை பறித்துச் சென்ற நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராணிக்கு காயம் ஏற்பட்டது... திருடர்களை கந்தசாமி சிறிது தூரம் துரத்திச் சென்றார். ஆனால் அவர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்