கண் முன்னே காணாமல் போன வீடு... மண்ணோடு மண்ணாக மறைந்த பணம், நகை - காலில் விழுந்த பெண்

x

நெல்லை டவுன் பெரிய தெரு பகுதியில் வசித்து வருபவர் சங்கரலிங்கம்... இவரது மனைவி வள்ளி... பைண்டிங் பிரஸ் தொழில் நடத்தி வரும் இத்தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள்... கஷ்டப்பட்டு உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஓட்டு வீட்டை மாடி வீடாகக் கட்டியுள்ளனர் இத்தம்பதி... இதற்கு முன்னரும் பல வெள்ளப்பெருக்குகளை இந்த வீடு கண்டுள்ளது... ஆனால் அப்போதெல்லாம் அசையாத இவர்களின் கனவு இல்லம், இப்போதைய வெள்ளத்தில் மண்ணோடு மண்ணாக கரைந்தது... உடைமைகள், 2வது மகள் திருமணத்திற்கு சிறுக சிறுக சேர்த்த 25 சவரன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், முதல் மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்த சீர் வரிசை பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அத்தனையையும் வெள்ளம் வாரிக் கொண்டு போய் விட்டது... மொட்டை மாடி வழியே பக்கத்து வீட்டுக்கு இவர்கள் தப்ப... சங்கரலிங்கம், வள்ளி கண் முன்னே அவர்களின் கனவு வீடு காணாமல் போனது...


Next Story

மேலும் செய்திகள்