நாட்டு பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி...சோகமான நாளாக மாறிய தீபாவளி

x

கலவை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ் மற்றும் அஷ்வினி. இவர்களுக்கு நவிஷ்கா என்ற 4 வயது பெண் குழந்தையும், ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரமேஷின் அண்ணன் விக்னேஷ் நாட்டு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது பட்டாசானது சிதறி சிறுமியின் மீது பட்டு வெடித்தது. இதில் சிறுமிக்கும், சிறுமியை காப்பாற்ற முயன்ற விக்னேஷிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் செய்யாறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்