ரகசிய வசியம் செய்த நண்பன் - பெண்ணாக உருமாறிய 26 வயது ஆண்.. கடலூரில் பகீர்.. உருக்குலைந்த காட்சிகள்

x

கடலூர் அருகேயுள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார்....

26 வயதான இவர், அருகில் உள்ள நத்தம்பட்டு பகுதியை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில், நாளடைவில் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்து தன்பாலின காதலர்களாக வலம் வந்ததாக கூறப்படுகிறது....

திடீரென வினோத்குமாரை பெண்ணாக மாற இளைஞர் வற்புறுத்தியதாகவும், இருவரும் எல்லா காதல் ஜோடிகளையும் போல கணவன் மனைவியாக வலம் வரலாம் என ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் கூறப்படுகிறது...

இளைஞர் மீதான தன்பாலின காதலில் மூழ்கி கிடந்த வினோத்குமார், இளைஞரின் பேச்சை கேட்டு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியதாகவும், வினோத்குமார் என்ற தனது பெயரை வினோதினி என மாற்றிக் கொண்டதாகவும் தெரிகிறது....

இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென இருவரையும் இளைஞரின் குடும்பத்தார் பிரித்ததாக கூறப்படுகிறது..

தொடர்ந்து இளைஞருக்கு அவசர அவசரமாக வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரின் வீட்டார் முயன்று வருவதாக கூறி ஆதங்கம் கொண்ட வினோதினி, ஊர் பஞ்சாயத்து மூலம் இளைஞரின் திருமண வேலைகளை தடுத்து நிறுத்தியதோடு, தங்களை சேர்த்து வைக்குமாறு முறையிட்டிருக்கிறார்...

இதையறிந்து கொந்தளித்து போன இளைஞரின் வீட்டார் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளே வினோதினியை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது...

இதனால், கொந்தளித்து போன அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை மீட்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அவர் மண்ணெண்ணெயை குடித்தது பரபரப்பை மேலும் கூட்டியது....

உடனே, அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தன் நண்பன் மீதே காதல் கொண்டு, தன்பாலின காதலில் மூழ்கிய இளைஞர், காதல் நண்பனுக்காக திருநங்கையாக மாறிய சம்பவமும், தற்போது அவர் தொடுத்திருக்கும் குற்றச்சாட்டும் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது....


Next Story

மேலும் செய்திகள்