1 லட்சம் சதுர அடி நிலம்.. அதிமுக பிரமுகர் வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்த CBCID

x

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவை சேர்ந்த மனோகரன், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ளார். இவர் கடந்த 2018ம் ஆண்டு மன்னார்குடி சேர்ந்த நானம்மாள் என்ற பெண்மணிக்கு சொந்தமான ஒரு லட்சம் சதுர அடி நிலத்தை வாங்கியிருந்தார். அந்த நிலத்தை வாங்கும் போது போலியாக சில ஆவணங்களை கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக ஞானம்மாள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர் மனோகரன் உள்ளிட்ட சிலர் முன்ஜாமின் பெற்றிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது, இதை எடுத்து சிபிசிஐடி போலீசார் இன்று அதிகாலை 4 மணி அளவில் தொடங்கி மன்னார்குடி கீழ ஆறாம் தெருவில் உள்ள மனோகரனின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் சோதனையையொட்டி . ஆறாம் தெரு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்