அதிரடி வீரர்களை பின்னுக்கு தள்ளி - First இடத்தை பிடித்த விராட் கோலி

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு வீரர் விராட் கோலி வசம் உள்ளது. நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 319 ரன்கள் எடுத்து உள்ளார். இதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப் பட்டியலில், மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீட் பும்ரா முதலிடம் பிடித்தார். சஹால் 10 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், ஜஸ்ப்ரீட் பும்ரா நேற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குறைந்த சராசரி மற்றும் எகானமி மூலம் 10 விக்கெட்டுகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்