தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் - காலிறுதியில் வெற்றிவாகை சூடிய அஸ்மிதா

x

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை அஸ்மிதா சலிகா முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை வார்டோயோவை 21க்கு 14, 19க்கு 21, 21க்கு 13 என்ற செட் கணக்கில் அஸ்மிதா வீழ்த்தினார். இதன்மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த அஸ்மிதா, இன்று நண்பகல் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சுபானிதாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்