இலங்கை அதிபர் அளித்த உறுதி... எம்.பி. சொன்ன முக்கிய தகவல்

x

ராஜீவ் வழக்கில் விடுதலையான சாந்தனை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அதிபருடனான சந்திப்பின் பின்னர் இவ்வாறு கூறிய அவர், சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சாந்தன் தாயாரிடமிருந்து கடிதமும், தங்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் கடிதமும் வழங்குமாறு அதிபர் கோரியதாக சிறீதரன் குறிப்பிட்டார். சாந்தனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் சிறீதரன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்