"கைலாசம், வைகுண்டத்தை உலகிற்கு கொண்டு வந்த அம்பானி.." - அதிர்ச்சியில் ரஜினி சொன்ன வார்த்தை

x

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. மூன்று நாட்களாக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில், சர்வதேச பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். விழா முடிந்து சென்னை திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளை முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் நடத்திய விதம் பிரம்மிக்க வைப்பதாக புகழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்