BREAKING || விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு முடிந்த கையோடு அடுத்த ஸ்கெட்ச்... தோண்டித் துருவும் ED

x

BREAKING || விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு முடிந்த கையோடு அடுத்த ஸ்கெட்ச்... தோண்டித் துருவும் ED

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள 35.79 கோடி வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் விபரங்களையும் குற்றப்பத்திரிகை நகலையும் அதற்காக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ள ஆவண நகல்களையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விஜய் பாஸ்கர் 38 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் எஃப் ஐ ஆர் மட்டுமல்லாது லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்