"என் படத்தை போல என் செயலும் இருக்கும்" - தங்கர் பச்சான் சுவாரஸ்ய பேச்சு

x

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான், கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். சிங்கிரிகுடி நரசிம்மர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், குமாரமங்கலம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு, தூக்கணம்பாக்கம், குட்டியாங்குப்பம், திருப்பனம்பாக்கம், நல்லாத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து, சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்