"பயப்பட வேண்டாம் மோடி ஜி... ஒருபோதும் செய்ய மாட்டேன்.." - முழங்கிய ராகுல்

x

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மோடி பயப்பட வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல... மாறாக மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக தாங்கள் தலைகுனிய மாட்டோம் என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் தொண்டரும் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசி வரை போராடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்