"ஒரே இந்தியா... ஆனா தமிழகத்திற்கு மட்டும்.." - புள்ளி விவரங்களுடன் கொந்தளித்த திருச்சி சிவா MP

x

நிதிக் குழு பரிந்துரைத்த 42 சதவீதத்தை விட குறைவாகவே மாநிலங்களுக்கு வருவாய் பகிர்ந்தளிக்கப்படுவதாக திமுக எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரை மீது மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழகம் வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே திருப்பி அளிக்கப்படுவதாகவும் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2.3 ரூபாய் திரும்ப வழங்கப்படுவதாகவும் கூறினார். பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் தமிழகத்திற்கு நிவாரண நிதி 5 ஆயிரம் கோடி கோரப்பட்ட நிலையில், 450 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்