யார் அந்த லண்டன் `டான்'.. வினோத மொபைல் App.. நாம் தமிழரும் ரெய்டும்.. பகீர் பின்னணி

x

தமிழகம் முழுவதும் உள்ள 6 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான 10 க்கும் மேற்ப்பட்ட இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் ஓமலூரில் யூடியூபை பார்த்து துப்பாக்கி தயாரித்த இரு இளைஞர்கள் கைதின் தொடர்ச்சி என கூறப்படுகிறது. விசாரணையில் தீவிர வாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவர, இதனை தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பினர் இரு இளைஞர்களிடம் நடத்திய விசாரணையின் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக

என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் லண்டனில் உள்ள விடுதலை புலிகளின் முக்கிய பிரமுகருடன் பிரத்யேக செயலி மூலமாக தொடர்பு கொண்டதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்