"வெயிட் அண்ட் சீ".. பஞ்ச் பேசிய ஜெயகுமார்

x

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ந‌த்தம் விஸ்வநாதன் தலைமையில், ஜெயக்குமார், செங்கோட்டையன், வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாய சங்க‌ங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு சங்க‌ங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ந‌த்தம் விஸ்வநாதன், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அறிக்கையாக இந்த தேர்தல் அறிக்கை இருக்கும் என்றார். மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக விமர்சித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் என்றார். பாஜக இல்லாத ஒரு மகத்தான கூட்டணியை அதிமுக அமைக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்