கொதித்தெழுந்த கெஜ்ரிவால்... காங்.,க்கு நேரடி சவால்..! - I.N.D.I.A.-ல் கிளம்பிய பூகம்பம்

x

அசாம் மாநிலத்தில் வேட்பாளரை திரும்ப‌ப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசையும் வேட்பாளரை திரும்ப‌ப் பெற தயாரா என்று சவால் விடுத்துள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே, டெல்லி, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால், அசாம் மாநிலத்தில் உடன்பாடு எட்டாத‌ நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்திருந்த கௌஹாத்தி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு, காங்கிரசும் வேட்பாளர்களை அறிவித்த‌து. இரு கட்சிகளும் போட்டியிட்டால், வாக்குகள் பிரிந்து பாஜகவுக்கு சாதகமாக அமையாதா என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது. இதனால், ஒற்றுமைக்காகவும், வாக்குகள் பிளவுபடுவதை தடுப்பதற்காக, மிகப்பெரிய தியாகம் செய்ய முன்வந்திருப்பதாக தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தங்களது வேட்பாளர்களை திரும்ப‌ப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதில் நடவடிக்கையாக திப்ரூகர் மற்றும் சோனித்பூர் தொகுதிகளில் வேட்பாளர்களை காங்கிரஸ் திரும்ப‌ப்பெற தயாரா என சவால் விடுத்துள்ளது. இல்லை என்றால், பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய கூட்டணி வைத்துள்ளது என்று தெளிவாகும் என்றும், ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்