"அரியானா வன்முறை பாரபட்சமின்றி நடவடிக்கை" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

x

அரியானா வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தள பதிவில்,

அரியானாவில் நடந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உண்மையான பலம் என்பது அமைதி, அகிம்சை மற்றும் இணக்கமாக வாழ்வதில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஹரியானாவில், விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்