"பிரதமர் மீதுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன்".. அண்ணாமலை பரபரப்பு பேச்சு

x

இந்தியா முழுமைக்கும் பிரதமர் மோடி, தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் "என் மண் என் மக்கள்" நடை பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அ ண்ணாமலை, பேருந்து நிலையம் பகுதியில், மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு குடும்பம் மட்டுமே இங்கு வளர்ந்து வருவதாகவும், எம்.பி கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளியில் ஆங்கிலம், NEET கற்றுக் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எந்த நேரமும் கதிர் ஆனந்த் வீட்டுக் கதவை அமலாக்கத்துறை தட்டும் என்றும் அண்ணாமலை கூறினார். அண்ணாமலையின் பேச்சுக்கு இடையே ஆம்புலன்ஸ் வந்த போது, பேச்சை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட சொன்னார். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு அவர் பேச்சை தொடர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்