பட்டையை காட்டிய நையாண்டி மேளம் - மாஸ் செய்த மாணவர்கள்..திருவிழாவை மிஞ்சிய பள்ளி வளாகம்

x

நாகை பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்கள் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தொடங்கி வைத்து, மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்த வண்ணமயமான 50 பாணைகளை பார்வையிட்டார். காவடி ஆட்டம், கரகாட்டம், புலிவேசம் உள்ளிட்டவற்றை ஆடி மாணவர்கள் அசத்தினர். இலந்தை மிட்டாய், ஐஸ்மிட்டாய், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி,க டலை மிட்டாய், தேன் மிட்டாய், தேங்காய் பர்பி, உள்ளிட்டவற்றை குழந்தைகள் உண்டு மகிழ்ந்தனர். மாணவர்களும், பெற்றோர்களும் என ஏராளமானோர் கலந்துகொண்டதால், பள்ளி வளாகம் திருவிழா போன்று காட்சியளித்த‌து.

பட்டையை காட்டிய நையாண்டி மேளம் - மாஸ் செய்த மாணவர்கள்..திருவிழாவை மிஞ்சிய பள்ளி வளாகம்


Next Story

மேலும் செய்திகள்