கலவரமான கல்யாண வீடு - அமைச்சர் மூக்கை உடைத்த கொடூரம் - சரமாரி தாக்குதல் செய்த கும்பல்

x

உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள அம்மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்தனர். அப்போது, அங்கிருந்த சிலர் அமைச்சரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தின்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அமைச்சர் சஞ்சய் நிஷாத்தை தாக்கினார். இதில் அமைச்சருக்கு மூக்கில் ரத்தம் வழிந்தது. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்