இன்றைய தலைப்பு செய்திகள் (12-08-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நீட் விலக்கு தொடர்பாக பெற்றோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு அனுப்பிய மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து கேள்வி எழுப்பிய பெற்றோருக்கும் ஆளுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்வியாளரின் கருத்துகளை கேட்டறிந்தோம்... செய்தியாளர் சதீஷ்முருகன் வழங்கிய தகவல்கள் இவை...

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உறுதி அளித்துள்ளார். விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. செய்தியாளர்கள் ராமசுந்தரம், சங்கர் வழங்கிய தகவல்கள் இவை...

ராமசுந்தரம், சக மாணவர்களால், பள்ளி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவத்தில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இதுகுறித்த கூடுதல் விவரங்களை சொல்லுங்க.

டெல்லி அதிகாரிகள் நியமன உரிமை தொடர்பான சட்டதிருத்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல்....


Next Story

மேலும் செய்திகள்