"ஜெய் அமராவதி" கோஷம் - விழி பிதுங்கி நின்ற இடத்தில் ரோஜா காட்டிய உடனடி ரியாக்ஷன்

x

தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்ய வந்திருந்த பெண் தன்னார்வலர்கள் சிலர் தெலுங்கு தேசம் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது... அவர்கள் ரோஜாவை சூழ்ந்து கொண்டு ஜெய் அமராவதி என்று முழக்கங்கள் எழுப்பினர்... ரோஜாவையும் முழக்கம் எழுப்பும்படி அவர்கள் வற்புறுத்தினர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமராவதியை தலைநகராக மாற்றுவோம் என தெலுங்கு தேசம் கட்சியினர் முழங்கி வரும் நிலையில், ரோஜா சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் இதுபோல் சம்பவம் நிகழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது... ஆனால் அவர்களை ரோஜா சிரித்தபடி கடந்து சென்றார்... முழக்கங்கள் எழுப்பியவர்களில் சிலர் அதன் பின்னர் ரோஜாவுடன் இணைந்து செல்பியும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்