"40 வருடத்தில் இதுபோல் நடந்ததில்லை" ஐயப்பனை பார்க்காமல் கண்ணீருடன் திரும்பும் பக்தர்கள்..

x

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இதனால் பம்பை, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இந்நிலையில் அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரவில்லை என குற்றம்சாட்டும் பக்தர்கள், காவல்துறை தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் ஐயப்பனை தரிசனம் செய்யாமல் பாதி வழியிலேயே இருமுடியை பிரித்து வேதனையோடு வீடு திரும்பி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்