8 கிலோ.. ரூ.1.60 கோடி.. வனத்துறையினருக்கே அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

x

கேரளாவில் 2 தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 4 பேரை வனத்துறை கைது செய்துள்ளது. மலப்புரத்தை சேர்ந்தவர்கள் தந்தங்களை விற்பனை செய்ய உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வாங்குவது போல் நாடகமாடி கோழிக்கோடு மாவூரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வருமாறு வனத்துறையினர் கூறியுள்ளனர். மாறு வேடத்தில் இருந்த வனத்துறையினர், காரில் வந்த 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். 8 கிலோ எடை கொண்ட இந்த தந்தங்களின் மதிப்பு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் என தெரவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்