நாடாளுமன்ற Attack முக்கிய தகவல் - பாஜக எம்பியை வீட்டிலே மடக்கி வாக்குமூலம்..?

x

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி சம்பவம்- பாஜக எம் பி யிடம் வாக்குமூலம் பெற டெல்லி காவல்துறை முடிவு.

நாடாளுமன்றத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாதுகாப்பு குளறுபடி சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற அவைக்குள் குதித்த சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியிருக்கு பார்வையாளருக்கான அனுமதி சீட்டை வழங்கியது மைசூர் தொகுதியின் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளரிடம் விசாரணை நடத்த சிறப்பு பிரிவு காவல் துறை முடிவெடுத்துள்ளது.

பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடமும் அவரது உதவியாளரிடமும் அனுமதி சீட்டு வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் பெற டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்