போராட்டத்தை முடிக்க மகாராஷ்டிரா முதல்வர் செய்த காரியம்
மகாராஷ்ட்ராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தால் பல இடங்களில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், கோரிக்கைகளை அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனது உண்ணாவிரதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மனோஜ் ஜரங்கே முடித்துக்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கில் திரண்ட மராத்தா சமூகத்தினர் உற்சாகமடைந்து வாழ்த்து முழக்கம் எழுப்பினர். முன்னதாக, நவி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலைக்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜரங்கே ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story