ஆசை ஆசையாக காதலித்து திருமணம்..வழிமறித்து மனைவிக்கு தீ வைத்த கணவன்

x

கேரள மாநிலத்தில் மனைவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கணவன் கொலை செய்த சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்த ஷியாம்ஜித் சந்திரன் என்பவரும், அவரது மனைவி ஆரதியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆரதியின் பெயரில் உள்ள சொத்தை விற்க வேண்டும் என்பதற்காக ஷியாம்ஜித் சந்திரன், அவரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் ஆரதி சொத்தை விற்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்தசூழலில், சேர்த்தலா பகுதியில் ஆரதியை வழிமறித்த ஷியாம்ஜித் சந்திரன், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அலறிதுடித்த ஆரதி, சாலையோரம் உள்ள வீட்டிற்குள் ஓடிய நிலையில், அவ்வீட்டை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆரதி உயிரிழந்துள்ளார். மனைவி மீது தீ வைத்தபோது தீக்காயமடைந்த ஷியாம்ஜித் சந்திரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்