திடீரென காணாமல் போன டீச்சர்... இளைஞருடன் நடந்த பயங்கர சண்டை - "15,000 கொடுத்தோம்" - அதிர்ச்சி வீடியோ

x

மாண்டியா மாவட்டம் மாணிக்யனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபிகா. இவருக்கு லோகேஷ் என்பவருடன் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த தீபிகா, கடந்த 20ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்காண்டு வந்தனர். இந்த நிலையில், மேலக்கோடு யோக நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ள மலையடிவாரத்தில், கழுகுகள் வட்டமிட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள், அங்கு சென்று பார்த்தபோது, பெண்ணின் உடல் பாதி புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த பெண் குறித்து விசாரித்தபோது, அது காணாமல் போன தீபிகா என உறுதியானது. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்