கணவனின் மன்னிக்க முடியாத குற்றம்.. மகனை பார்க்க விடாமல் பூட்டிய மனைவி - ஜன்னலுக்குள் மகன்.. கதறிய தந்தை - "உனக்காக தான்டா உயிர் வாழ்றேன்"

x

கன்னியாகுமரி மாவட்டத்தில், பாலியல் புகாரில் சிறை சென்றதால், பிரிந்து வாழும் மனைவியிடம் இருக்கும் குழந்தையைப் பார்க்கச் சென்ற இளைஞர் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டி விளையைச் சேர்ந்த பிபின் பிரியன் என்பவர், மேக்காமண்டபத்தைச் சேர்ந்த ஜெபபிரியா என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆத்விக் பிரியன் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் உறவுக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிபின் பிரியன் கைது செய்யப்பட்டார். கணவரின் கொடூர குணத்தை அறிந்த ஜெயப்பிரியா, அவரை விட்டு பிரிந்து தக்கலையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தற்போது ஜாமினில் வெளி வந்திருக்கும் பிபன் பிரியன், தனது மகனை பார்க்கப் போராடி வருகிறார். மாமியார் வீட்டில் தனியறையில் இருக்கும் மகனிடம் ஜன்னல் வழியாக அவர் கதறி அழும் வீடியோ கண்கலங்க வைக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்