"எனது சகோதரிகளுக்காக தினமும் இதை வேண்டுகிறேன்"

x

எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, தனது சகோதரிகளின் வாழ்வை எளிதாக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாய் குறைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சிலிண்டர் விலை குறைப்பானது, எனது குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளின் சவுகரியத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார். தனது சகோதரிகள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதே, கடவுளிடம் தனது பிரார்த்தனை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்