பிரபல அழகு சாதன பேக்டரியில் பெண் பலி.. காணாமல் போன 9 பேர்.. 30க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி

x

ஹிமாச்சலப்பிரதேசத்தில், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்தில் நறுமணம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலையில் ரசாயனங்கள் இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதனிடையே, தீ விபத்தில் 9 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்