புத்தாண்டு திருப்பதியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம்..

x

ஆங்கில புத்தாண்டு தினமான இன்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்... விஐபி பிரேக் தரிசனம் மூலம் இன்று காலை சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். நாட்டு மக்கள் நலம், வளம் ஆகியவற்றுடன் வாழ அருள் புரிய வேண்டும் என்று புத்தாண்டு துவக்க நாளான இன்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்