காட்டு யானை தாக்கி பலி...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..அதிர்ந்த ஊர்மக்கள் - வெடித்த போராட்டம்

x

கேரள மாநிலம் வயநாட்டில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீசாருடன் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடரும் வன விலங்குகளின் அட்டகாசத்தைத் தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்திடவும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி மக்கள் மறியல் செய்தனர்.

போராட்ட பகுதியில் வந்த காவல் துறை அதிகாரியின் வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி நகர விடாமல் வழிமறித்தனர். இதே கோரிக்கையுடன் ஆனந்த வாடி நகரத்தில் கடை அடைப்பு போராட்டமும் நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்