தேர்தல் பத்திரம் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த SBI

x

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்குமாறு, எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த 14-ஆம் தேதி எஸ்.பி.ஐ. அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என கடந்த 15-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக, உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்