பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்-க்கு கொலைமிரட்டல்... பின்னணியில் தாவூத்..? மும்பையில் பரபரப்பு

x

பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தாவூத் இப்ராஹிம் கும்பல் என்ற பெயரில் மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய தாவூத் இப்ராஹிம் கும்பல் தன்னை அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் ஜேஜே மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கவும் திட்டமிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்