திடீரென தீ பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி... உள்ளே சிக்கி துடிதுடித்து பலியான நபர்

x

மகாராஷ்ட்ர மாநிலம் தானேயில், கண்டெய்னர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். தானேயில் உள்ள காட்பந்தர் சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது.

இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்த நபரின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அப்பகுதியில் 3 மணி நேரத்திற்குப்பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்