வாட்டும் குளிர்... உடனே பறந்த ரெட் அலர்ட் - வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்

x

டெல்லியில் குளிர்கால சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடர்ந்த பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமான சேவை தாமதமாகியுள்ளது. டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 3.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குளிர் அலை அதிகரித்துள்ளதால், டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தில் வரும் 16ம் தேதி வரை, அடர்ந்த பனி மற்றும் குளிர் அலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்