பள்ளத்தில் இறங்கிய லாரி...துடிதுடித்து பலியான ஓட்டுநர் - அப்பாவியாய் நின்ற யானையின் காட்சிகள்

x

திருச்சியை சேர்ந்த ராணி என்ற வளர்ப்பு பெண் யானை, கர்நாடகாவில் நடந்த தசரா பண்டிகையில் பங்கேற்ற நிலையில், மீண்டும் லாரியில் அழைத்து வரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாணமாவு பகுதி நெடுஞ்சாலையில், லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பள்ளத்தில் இறங்கிய லாரியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஓட்டுநர், லாரியின் முன்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக விரைந்த போலீசார் லாரியுடன் யானையை உயிருடன் பத்திரமாக மீட்டனர். உயிரிழந்த ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்