கனமழை எச்சரிக்கை - தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள்

x

கனமழை எச்சரிக்கை காரணமாக அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....இது தொடர்பாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி அகிலேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழக அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல, 25 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கான அதிநவீன கருவிகள், பொதுமக்களை காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவைகளுடன் மீட்பு படையினர் ஆயத்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை பேரிடர் மேலாண்மை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்