கோடிக்கணக்கில் மோசடி ஆர்.கே. சுரேஷ் ஆவணங்களை தரவில்லை...குற்றப் பிரிவு போலீசார் தகவல்

x

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்கள் உட்பட 22 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் தலைமைறைவாக இருந்து வந்த, இந்த நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை, துபாயில் இன்டர்போல் போலீசார் உதவியுடன் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் முன் ஆஜாராகி விளக்கம் அளித்திருந்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு போலீசார் தெரிவித்திருந்த நிலையில், ஆர்.கே. சுரேஷ் தற்போது வரை ஒப்படைக்கவில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் துபாய் சிறையில் உள்ள ஆருத்ரா நிறுவனத்தின் உரிமையாளரான ராஜசேகரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்