உணவு விநியோக நிறுவன ஊழியர்களுக்கு மாவட்ட காவல் துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


நாகர்கோவிலில் சேவியர் பாபு என்ற நிலத்தரகர், இரண்டு நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில், நாகர்கோவிலில் உள்ள தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுபின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் அறிவுரைகளை வழங்கினார்.

உணவு விநியோகிக்கும் பணியை செய்பவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பு வைப்பதால், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும்போது நன்னடத்தை சான்றிதழ்களை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்