சண்டையை விலக்கி விட்ட போலீசார் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை விலக்க முயன்ற காவலர் மீது கற்கள் வீசி தாக்கிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஆயுதப்படை காவலர் விஜயன், தலையில் அடிபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் செல்லப்பா, ஆலந்தூர் பகுதியை சேர்ந்த அஜித், வினோத், ரவி, விவேக் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்தார். மேலும், தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்