அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு... குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை, சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வடகாடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் அந்த பகுதியில் அடையாளம் தெரியாத வாகன மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்