டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை பைப்பால் தாக்கிய இளைஞர்

டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை பைப்பால் தாக்கிய இளைஞர்
x

சென்னையில் டிக்கெட் எடுக்க கூறியதால் அரசு பேருந்து நடத்துனரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். பாரிமுனையில் இருந்து திருவொற்றியூர் சென்ற 56சி பேருந்தில் அஜய் என்ற இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறிய போது, பணம் கொடுக்காமல் போக்கு காட்டியுள்ளார். காசிமேட்டில் இறங்கிய அஜய், காலடிப்பேட்டை அருகே பேருந்தை மடக்கி, நடத்துனர் கோவிந்தசாமியை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்