அண்ணன் கொலைக்கு ரிவெஞ்சு எடுத்த தம்பி… திருந்தி வாழ்ந்தவரை வெட்டி கொன்ற எதிரிகள்…

x

கோட்டகுப்பம் அடுத்த அணிச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ். 27 வயதாகும் விமல்ராஜ் ஆரோவில் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் வேலைச் செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ஒருகாலத்தில் அடிதடி சண்டை என ரத்தவாடையோடு சுற்றிவந்த விமல்ராஜ் தற்போதுதான் மனம் திருந்தி, குடும்பம் பிள்ளைகள் என செட்டிலாகியிருக்கிறார்…இந்த சூழலில்தான் சம்பவத்தன்று காலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருக்கிறார் விமல்ராஜ்.

கோட்டக்குப்பம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் விமல்ராஜை வழிமறித்து சண்டையிட்டிருக்கிறது. பிறகு அரிவாள், கத்தியால் விமல்ராஜை சாலையில் வைத்தே கொடூரமாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையின் ஒரு பகுதியாக விமல்ராஜின் கடந்தகால பக்கங்களை புரட்டியிருக்கிறார்கள். அப்போது தான் பழைய பகை அவரது உயிருக்கு உலைவைத்திருப்பது தெரியவந்துள்ளது.ஒரு காலத்தில் புதுச்சேரியையே கலக்கி வந்தவர்கள் அன்பு ரஜினி மற்றும் சோழன் என்ற இரண்டு ரவுடிகள்…

இதில் விமல் ராஜும் அவரது அண்ணன் வினோத் ராஜும், சோழன் கேங்கில் இருந்திருக்கிறார். சேழனும் கேங்கும், அன்பு ரஜினியும் பரம எதிரிகள். அடிக்கடி இருவருக்கும் வெட்டு குத்து நடப்பது வழக்கம். அதன் தொடர்சியாக 2019-ஆம் ஆண்டு பேனர் வைப்பதில் இருதரப்புக்கும் பிரச்சனை வெடித்திருக்கிறது. அந்த சண்டையில் கடுப்பான அன்பு ரஜினி கேங்க், சோழன் கேங்கிலிருந்த வினோத் ராஜை வெட்டிக் கொலைச் செய்திருக்கிறது. அண்ணன் கொலைக்கு பழிதீர்க்க நினைத்த விமல்ராஜ் தன்னுடைய நண்பர்களை கூட்டுச் சேர்த்து கொண்டு அதே வருடம் நவம்பர் மாதம் அன்பு ரஜினியை வெட்டிக் கொலைச் செய்திருக்கிறார். இதனால் இருதரப்புக்கு இடையே மென்மேலும் பகை வளர்ந்து வந்திருக்கிறது. விமல்ராஜ் ரவுடிசத்தை கை கழுவி விட்டு இல்லற வாழ்கையில் நுழைந்திருக்கிறார்.

அண்ணன் கொலைக்கு பழி தீர்த்ததோடு அவரது பகை கணக்கு முடிந்துவிட்டதாக நினைத்திருக்கிறார் விமல்ராஜ். இந்த சூழலில் தான் விமல்ராஜ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அன்பு ரஜினி கொலைக்கு பழிதீர்க்க அவர்கள் கேங்க் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்…


Next Story

மேலும் செய்திகள்