மாற்றி யோசித்த இளைஞர்கள்; அள்ள அள்ள பரோட்டாக்கள் - கோயில் அன்னதானத்தில் புதுமை

x

நெல்லை அருகே கோயில் திருவிழாவில் பரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் முக்கூடலில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில், ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7ஆம் நாளன்று நாராயணர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கப்பட்டது. அப்பகுதி இளைஞர்களின் முயற்சியால், சுமார் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் பரோட்டாக்கள் தயாரிக்கப்பட்டு அன்னதானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்