பிரான்சில் நடைபெற்ற ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இளம் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

x

பிரான்சில் நடைபெற்ற ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இளம் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 21 வயது இளம் இந்திய வீரரான பிரியான்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோகனேசென் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் செட்டை 21க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில், பிரியான்ஷூ வென்றார். 2வது செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் ஜோகனேசென் வெல்ல, ஆட்டம் சூடுபிடித்தது. வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் அதிரடியாக ஆடிய, பிரியான்ஷூ 21க்கு 16 என்ற கணக்கில் கடைசி செட்டைக் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.

--


Next Story

மேலும் செய்திகள்