“நீங்கதான் உதவனும்...“ பேசும்போதே உள்ளே தள்ளிய போலீஸ் - கலெக்டர் ஆபீஸ் முன் கதறிய பெண்

x

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்களுக்கும் காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த இந்திராணி, தனது மகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தனக்கு சொந்தமான நிலத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் சங்கரன் என்பவர் முறைகேடாக கிரையம் செய்து பட்டா பெற்றுக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய தாயையும் மகளையும் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் போலீசார்.

இதனால் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்