நேற்று ED செய்த சம்பவம்.. புதிய அதிர்ச்சி தகவல்.. அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்

x

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், 41 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்பு தொகையை முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை, விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், இந்தோனேசியா நிறுவனத்துக்கு 100 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சோதனையில் 41 கோடியே ஒன்பது லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகை முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்