மனைவி உடன் கள்ளத்தொடர்பு-ஆத்திரத்தில் மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்த நபர்..

x

காங்கயத்தை அடுத்த படையப்பா நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அருண்பாண்டி, 2 மாதங்களுக்கு முன்பு பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் கொடுவாய் அருகே மீட்கப்பட்டார். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவரும் மணி என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மணியும், அருண்பாண்டியும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், மணியின் மனைவியுடன் அருண்பாண்டி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. அருண்பாண்டி தனியாக வந்தபோது, மணியும், அவரது நண்பர் ஹரிகிருஷ்ணனும் சேர்ந்து, அருண்பாண்டியின் பிறப்புறுப்பை அறுத்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து மணியைக் கைது செய்த போலீசார், 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்